sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

த.வெ.க., மாநாட்டில் பங்கேற்போர் முதலுதவிக்கு ட்ரோனில் மருத்துவ 'கிட்' வியாபாரிகளுக்கு தாம்பூலம் வழங்கி அழைப்பிதழ்

/

த.வெ.க., மாநாட்டில் பங்கேற்போர் முதலுதவிக்கு ட்ரோனில் மருத்துவ 'கிட்' வியாபாரிகளுக்கு தாம்பூலம் வழங்கி அழைப்பிதழ்

த.வெ.க., மாநாட்டில் பங்கேற்போர் முதலுதவிக்கு ட்ரோனில் மருத்துவ 'கிட்' வியாபாரிகளுக்கு தாம்பூலம் வழங்கி அழைப்பிதழ்

த.வெ.க., மாநாட்டில் பங்கேற்போர் முதலுதவிக்கு ட்ரோனில் மருத்துவ 'கிட்' வியாபாரிகளுக்கு தாம்பூலம் வழங்கி அழைப்பிதழ்


ADDED : ஆக 17, 2025 03:21 AM

Google News

ADDED : ஆக 17, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த், ஆக., 21ல் நடக்கும் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தாம்பூலம் வழங்கி அழைப்பு விடுத்தார்.

மாநாட்டு பணிகளுக்காக மதுரையில் முகாமிட்டுள்ள ஆனந்த், மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு நேற்று காலை வந்தார்.

அங்கு, ஒவ்வொரு வியாபாரிக்கும் அன்னாசி, ஆப்பிள், மாதுளம், இரு வாழைப்பழங்கள் கொண்ட தாம்பூல தட்டு மற்றும் மாநாட்டிற்கான அழைப்பிதழை கொடுத்து, 'மாநாட்டிற்கு கட்டாயம் வரணும்' என கேட்டுக் கொண்டார்.

மாநாட்டில் நிறைய எண்ணிக்கையில் மக்கள் கூடுவர் என்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, மாநாட்டு வளாகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அந்த இடத்திலேயே முதலுதவி அளிக்க, 'ட்ரோன்' வாயிலாக மருத்துவ, 'கிட்' கொண்டு செல்ல சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.






      Dinamalar
      Follow us