தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு
தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு
ADDED : நவ 27, 2024 09:16 PM

சென்னை: தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்;
*சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக இருந்த ராஜீவ் குமார் ஐ.பி.எஸ்., லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக நியமனம்
*சிவில் பாதுகாப்பு இயக்குனராக இருந்த டி.ஜி.பி., வன்னிய பெருமாள் ஐ.பி.எஸ்., சென்னை ரயில்வே டி.ஜி.பி.,யாக நியமனம்
*சென்னையில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து டி.ஜி.பி.,யாக இருந்த மல்லிகா ஐ.பி.எஸ்., மனித உரிமைகள் ஆணையம், இயக்குநர் (விசாரணை) ஆக நியமனம்
* சென்னை ரயில்வே டி.ஐ.ஜி.,யாக இருந்த அபிஷேக் தீக்ஷித் ஐ.பி.எஸ்., ஐ.ஜி.,யாக பதவி உயர்த்தப்பட்டு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத்துறை ஐ.ஜி.,யாக நியமனம்
* லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக இருந்த எஸ்.பி., முத்தமிழ், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.