sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கா? விஜய்க்கு சீமான் கண்டிப்பு

/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கா? விஜய்க்கு சீமான் கண்டிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கா? விஜய்க்கு சீமான் கண்டிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கா? விஜய்க்கு சீமான் கண்டிப்பு

15


ADDED : டிச 19, 2024 01:56 PM

Google News

ADDED : டிச 19, 2024 01:56 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று விஜய் சொல்லக்கூடாது. மக்களை நேரில் சென்று சந்திப்பது தலைவர்களின் கடமை' என சீமான் தெரிவித்துள்ளார்.



திருச்சியில் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காதது தவறு அல்ல. விஜய் மக்களை பார்க்க போனால், கூட்டம் கூடி விடும். பாதுகாப்பு அளிப்பது போலீசாருக்கும் கடினம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று எப்படி த.வெ.க., தலைவர் விஜய் கூறலாம்? அது தவறான வார்த்தை. அப்படி சொல்லக் கூடாது. இரண்டு மாதம் மக்களோடு மக்களாக, நின்று வேலை செய்துள்ளோம்.

மக்களோடு மக்களாக நிற்பவர்களை அப்படி பேசுவதை ஏற்க முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று விஜய் சொல்லக்கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பது தலைவர்களின் கடமை. மக்களை நேரில் சென்று சந்திப்பது சடங்கு என கூறும் விஜய், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தது ஏன்?

துரோகம்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்தது ஏன்? ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரிப்பது மிகப்பெரிய துரோகம். தமிழக அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுப்பது தவறு. அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு சீமான் கூறினார்.






      Dinamalar
      Follow us