sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி

/

தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி

தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி

தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி

1


ADDED : ஜன 17, 2026 09:56 PM

Google News

ADDED : ஜன 17, 2026 09:56 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? என ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, பிரச்னைகள் பெருகும் சூழ்நிலையில், மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்போரை ஒடுக்கும் வகையில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொய் வழக்கு போட்டு, ஆளும் தி.மு.க., அரசு கைது செய்கிறது. விவசாயிகள் பிரச்னைக்காக குரல் கொடுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமியை, பொய் புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மக்கள் பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடுவது, அரசியலமைப்பு சட்டம் தந்த அடிப்படை உரிமை. அந்த உரிமையை பறிக்கும் வகையில், போராடுவோரை மிரட்டி ஒடுக்கும் வகையில் கைது செய்வதை பார்த்தால், தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, சர்வாதிகார ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது. அடக்குமுறைகளால் அநீதி வென்று விடாது என்பதை அதிகாரத்தில் உள்ளோர் உணரும் நாள் விரைவில் வரும். இவ்வாறு காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.






      Dinamalar
      Follow us