sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு திவாலாகி கோவில் நிதியை எடுக்கிறதோ? மத்திய அமைச்சர் முருகன் கேள்வி

/

அரசு திவாலாகி கோவில் நிதியை எடுக்கிறதோ? மத்திய அமைச்சர் முருகன் கேள்வி

அரசு திவாலாகி கோவில் நிதியை எடுக்கிறதோ? மத்திய அமைச்சர் முருகன் கேள்வி

அரசு திவாலாகி கோவில் நிதியை எடுக்கிறதோ? மத்திய அமைச்சர் முருகன் கேள்வி


ADDED : ஜூலை 13, 2025 02:11 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''கோவில் நிதியை எடுத்து செலவு செய்யும் அளவுக்கு தி.மு.க., அரசு திவாலாகி விட்டதா?'' என, மத்திய அமைச்சர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பெரம்பூர், ஐ.சி.எப்., வளாகத்தில், மத்திய அரசு பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், 249 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பின், மத்திய அமைச்சர் முருகன் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி ஆட்சி குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன சொல்கிறாரோ, அது தான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர்; அவர் சொல்வதே வேத வாக்கு. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.

கூட்டணி குழப்பம் குறித்து, தி.மு.க.,விடம் கேளுங்கள். எப்போது அந்த கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற சூழலில் திருமாவளவன் இருக்கிறார்; வைகோவும் அதே நிலையில் இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் அத்தகைய சூழலில் இருப்பதால், தி.மு.க., கூட்டணியே சுக்குநுாறாக உடையப் போகிறது.

இறை நம்பிக்கை இல்லாத அரசு, கோவில்களை விட்டு வெளியே வர வேண்டும். கோவில் நிதி, அறம் சார்ந்து பயன்படுத்தப்பட வேண்டும்.

கோவிலில் இருந்து எடுத்து, அரசு செலவு செய்கிறது என்றால், மற்ற நிதி எங்கே போனது; அரசு திவால் ஆகி விட்டதா? கோவில் நிதியில் இருந்து பள்ளி, கல்லுாரிகளை கட்டும் நிலையில் தான் தி.மு.க., அரசு இருக்கிறதா?

அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றதாக தி.மு.க., அரசு உள்ளது. தம்பிகளை எப்படி காப்பது, தம்பிகளை எப்படி பலப்படுத்துவது, தம்பிகளிடம் எப்படி பணிகளை பிரித்துக் கொடுப்பது என, முதல்வர் இருக்கிறார்.

தற்போதைய அரசின் திட்டங்கள் எல்லாமே, கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டமாகவும், மத்திய அரசின் திட்டங்களாகவும் தான் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us