ADDED : டிச 17, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் தீபம் குறித்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த விசாரணையின்போது, சில வழக்கறிஞர்கள், 'முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்கலாம். ஆனால் இரண்டு இடங்களில் தீபம் ஏற்ற முடியாது' என வாதங்களை முன்வைத்தனர். அதன் தத்துவத்தை அறியாமல், நீதிமன்றத்தில் பேசுகின்றனர்.
தீபத்துாணை சர்வே கல் என்று கூறினர். பின், சமணர்கள் கால துாண் என்று கூறுகின்றனர். சமணர்களின் வாழ்க்கை முறையை, முறையாக கற்காமல், கற்பனை கதைகளை நீதிமன்றத்தில் வாதங்களாக முன்வைத்துள்ளனர்.
இந்த வழக்கில், ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் நியமித்துள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவிலுக்கு எதிராக வாதாட, அரசுப் பணத்தை இஷ்டத்துக்கும் செலவிடுவதா? முருக பக்தர்களும், மக்களும் இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பர்.
-ராஜேஷ்
ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர்

