ADDED : ஜன 07, 2025 07:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்திய, நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'சனாதன சண்டாளனை நாட்டை விட்டு விரட்ட, ஓரணியாய், பேரணியாய் திரள்வோம் தமிழர்களே' எனப் பதிவிட்டுள்ளார்.
'சண்டாளன்' என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அந்த வார்த்தையை பயன்படுத்தினால், சட்டப்படி குற்றம் என, சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த சட்டம், நாஞ்சில் சம்பத் மீது பாயாதா?
அன்று எதிர்ப்பு தெரிவித்த, தி.மு.க., ஆதரவு கட்சிகள் அனைத்தும், இன்று நாஞ்சில் சம்பத் விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?
இதற்குதான் தோழமை சுட்டுதல் என்று பெயரோ?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

