sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா? கேட்கிறார் சீமான்!

/

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா? கேட்கிறார் சீமான்!

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா? கேட்கிறார் சீமான்!

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா? கேட்கிறார் சீமான்!

1


ADDED : செப் 06, 2025 04:56 PM

Google News

ADDED : செப் 06, 2025 04:56 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரசு, கம்யூனிஸ்ட், விசிக பிரமுகர்களும் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்துள்ளது,' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை; தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில், பாமக மாநில நிர்வாகியும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ஸ்டாலின் மீது, ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த 2024 ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2024ம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரும், ஜூலை மாதம் 3ம் நாள் அதிமுக கொண்டாலம்பட்டி பகுதிச்செயலாளர் சண்முகமும், ஜூலை 16ம் தேதி நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளர் சி.பாலசுப்ரமணியமும், ஜூலை 27ம் தேதி சிவகங்கை மாவட்ட பாஜ கூட்டுறவு அணிச் செயலாளர் செல்வகுமாரும்,வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இவையெல்லாம் கடந்த 2024 முதல் ஓராண்டிற்குள் நடந்த படுகொலைகள் மட்டுமே. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரசு, கம்யூனிஸ்ட், விசிக பிரமுகர்களும் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்துள்ளது.

பொதுவாழ்வில் ஈடுபடும் மக்கள் பிரதிகளுக்கே உரிய பாதுகாப்பில்லாத திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்டபோதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதல்வர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.

ஆகவே, பாமக மாநில நிர்வாகி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us