sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல; எச்சரிக்கிறார் எல்.முருகன்

/

கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல; எச்சரிக்கிறார் எல்.முருகன்

கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல; எச்சரிக்கிறார் எல்.முருகன்

கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல; எச்சரிக்கிறார் எல்.முருகன்

8


ADDED : அக் 19, 2024 12:32 PM

Google News

ADDED : அக் 19, 2024 12:32 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சென்னை வெள்ள விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல' என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில், எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தி மாத கொண்டாட்ட விவகாரத்தில் தி.மு.க.,வின் குற்றச்சாட்டு மக்களை திசை திருப்பும் செயல். மத்திய பா.ஜ., அரசு தமிழுக்கு உரிய மரியாதை அளித்து வருகிறது.

எல்லாம் விஷயத்திலும் அரசியல் செய்யக் கூடாது. சென்னை வெள்ளம் விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல.

வருமானம்

தி.மு.க., நினைக்கும் அரசியல் எல்லாம் இப்பொழுது பண்ண முடியாது. மக்கள் தெளிவாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தி மொழிக்கு யாரும் ஆதரவாளர்கள் கிடையாது. அதேநேரத்தில் எதிர்ப்பாளர்களும் கிடையாது. சி.பி.எஸ்.,இ., பள்ளியில் இந்தி ஒரு மொழியாக இருக்கிறது எனக் கூறி பள்ளி நடத்தும் தி.மு.க.,வினர் இழுத்து மூட ரெடியா? இது அவர்களுக்கு வருமானத்தை கொடுக்கிறது.

ஏமாற்ற வேண்டாம்!

தி.மு.க.,வினர் ஆக்கபூர்வமான அரசியலை செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை ஒழியுங்கள். தமிழகத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தீட்டுங்கள். மொழிகளை வைத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். தமிழை உலக அளவில் எடுத்து செல்வதில் முதன்மையாக இருப்பது பிரதமர் மோடி தான். ஒட்டுமொத்த தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.






      Dinamalar
      Follow us