டெல்டாகாரன் என வசனம் பேசினால் போதாது: ஸ்டாலினை சாடிய இ.பி.எஸ்.,
டெல்டாகாரன் என வசனம் பேசினால் போதாது: ஸ்டாலினை சாடிய இ.பி.எஸ்.,
UPDATED : ஏப் 30, 2024 01:29 PM
ADDED : ஏப் 30, 2024 12:22 PM

சென்னை: 'நான் ஒரு டெல்டாகாரன் என்று தேர்தல் நேரத்தில் வசனம் பேசினால் மட்டும் போதாது. விவசாயிகள் கஷ்டப்படும் இந்த கோடை காலத்தில் லாரி மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை
போதிய மழை இல்லாமல், குழந்தைகள் போல் பார்த்து, பார்த்து, தாங்கள் பயிரிட்டு, வளர்ந்து, பலன் தர வேண்டிய நேரத்தில், மா மரங்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் வேதனையைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
டெல்டாகாரன்
ஏற்கனவே, இப்பகுதி விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், இன்று வரை திமுக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 'நானும் ஒரு டெல்டாகாரன்' என்று தேர்தல் நேரத்தில் வசனம் பேசினால் மட்டும் போதாது.
வறட்சி
விவசாயிகள் கஷ்டப்படும் இந்த கோடை காலத்தில், வறட்சியால் வாடும் மா மரங்களைக் காத்திட, லாரிகள் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தர வேண்டும் என திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

