ADDED : மார் 08, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, அதிகாலையில் பனிப்பொழிவாலும் மண்டபம்,தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மல்லிகை வரத்துகுறைந்துள்ளது. அதுபோல வெளியூர்களில் இருந்தும் வரத்துகுறைந்துள்ளதால் ராமநாதபுரத்தில் கடந்த வாரம் கிலோ ரூ.600க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.1500க்கு விற்கப்பட்டது.
பூ வியாபாரி முருகன்கூறுகையில் '' சுபமுகூர்த்த தினம், மகா சிவராத்திரி விழாவையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கிலோ மல்லிகை ரூ.1500, முல்லை ரூ.1500, கனகாம்பரம் ரூ.1800, ரோஜா ரூ.400, செண்டுமல்லிரூ.150, ரூ.15க்கு விற்ற கதம்பம் முழம் ரூ.30 என விற்கிறோம் என்றார்.

