ADDED : மே 10, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'மனிதநேய மக்கள் கட்சி சார்பில், வக்பு சட்டத்திற்கு எதிராக, இன்றும், 13ம் தேதியும் நடக்கவிருந்த போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது' என, அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், 'நாட்டில் நிலவும் அசாதரணமான சூழலை கருத்தில் வைத்து, வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து, இன்று சேலத்திலும், 13ம் தேதி மயிலாடுதுறையிலும் நடக்க இருந்த போராட்டம், தள்ளி வைக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.