sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உண்மையை நிலை நிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்கள்; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

/

உண்மையை நிலை நிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்கள்; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உண்மையை நிலை நிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்கள்; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உண்மையை நிலை நிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்கள்; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

7


ADDED : நவ 16, 2024 11:22 AM

Google News

ADDED : நவ 16, 2024 11:22 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உண்மையை நிலை நிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரஸ் கவுன்சில் 1966 ஜூலை 4ல் தொடங்கி நவ., 16ல் செயல்பட துவங்கியது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவ.,16ல் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது துாண் பத்திரிகை, ஊடகம். மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதில் பங்காற்றுகிறது. சமூகத்தின் கண்ணாடியாக பத்திரிகையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உண்மையை நிலை நிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்களுக்கு, தேசிய பத்திரிகையாளர் தினத்தில் மரியாதை செலுத்துகிறோம். சகிப்புத்தன்மை இல்லாத காலகட்டத்தில், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் கடைசி பாதுகாவலராக பத்திரிகையாளர்கள் விளங்குகின்றனர்.

பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us