sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராகு காலம் முடிந்ததும் மனு தாக்கல் செய்த கமல்

/

ராகு காலம் முடிந்ததும் மனு தாக்கல் செய்த கமல்

ராகு காலம் முடிந்ததும் மனு தாக்கல் செய்த கமல்

ராகு காலம் முடிந்ததும் மனு தாக்கல் செய்த கமல்

6


ADDED : ஜூன் 07, 2025 04:02 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 04:02 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், ராகு காலம் முடிந்ததும் மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல், வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது.

தி.மு.க., சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க., சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்நிலையில், சுபமுகூர்த்த நாளான நேற்று, இவர்கள் அனைவரும் மனு தாக்கல் செய்தனர். நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12:00 மணி வரை ராகு காலம் என்பதால், அது முடிந்ததும், பகல் 12:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கமல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், அக்கட்சி வேட்பாளர்கள் நேற்று மதியம் 1:00 மணிக்கு மனு தாக்கல் செய்தனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரியான, சட்டசபை கூடுதல் செயலர் சுப்பிரமணியம், வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அ.தி.மு.க., வேட்பாளர் தனபால், தன் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விபரங்களை, வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us