sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காங்கேயத்தில் தாசில்தார் அலுவலகம் ஜப்தி

/

காங்கேயத்தில் தாசில்தார் அலுவலகம் ஜப்தி

காங்கேயத்தில் தாசில்தார் அலுவலகம் ஜப்தி

காங்கேயத்தில் தாசில்தார் அலுவலகம் ஜப்தி


ADDED : ஜூலை 19, 2011 04:48 PM

Google News

ADDED : ஜூலை 19, 2011 04:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : காங்கேயம் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் வீரணாம்பாளையம் ஊராட்சி தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமாக பெரியார் நகரில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 1991ம் ஆண்டு இந்த நிலத்தில் 2.75 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் நல மேம்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அவருக்கு 43, 642 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த தொகை போதாது எனக்கூறி ரங்கசாமி கோர்ட்டில் மனு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட் கடந்த 1993ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டநிலத்திற்கு 12 சதவீத வட்டியுடன் 81,024 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. ஆனால் தொகை வழங்கப்படவில்லை. இதனையடுத்து ரங்கசாமி கடந்த1.03. 2010ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் கடந்த 8.4.2011ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் அலுவலகத்தை கோர்ட் அதிகாரிகள் ஜப்தியிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us