sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கார்த்திகை தீபத் திருவிழா: அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

/

கார்த்திகை தீபத் திருவிழா: அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

கார்த்திகை தீபத் திருவிழா: அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

கார்த்திகை தீபத் திருவிழா: அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

5


ADDED : டிச 19, 2025 02:00 PM

Google News

5

ADDED : டிச 19, 2025 02:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி காளியம்மன் கோவில், கருப்பணசாமி கோவில் முன் கார்த்திகை தீபத் திருவிழா நடத்த அனுமதித்த, ஐகோர்ட் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் உள்ள கருப்பணசாமி கோவிலை மீண்டும் திறக்க வேண்டும். தினசரி பூஜைகளை நடத்த மக்களை அனுமதிக்க வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழா நடத்த அனுமதி வழங்க ஆத்துார் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை டிச.2 ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

ஹிந்து, கிறிஸ்தவர்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கிராமத்தில் பெரும்பான்மை சமூகமான கிறிஸ்தவர்களுக்கு குறிப்பிட்ட சர்வே எண்ணிற்குட்பட்ட நிலத்தில் எந்த உரிமையும் இல்லை. மனுவில் குறிப்பிட்டுள்ள இடங்களில் கார்த்திகை தீபத்திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து திண்டுக்கல் ஆர். டி. ஓ. மற்றும் பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்த சபரிமுத்து தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வு முன் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us