தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கருணாநிதி அருங்காட்சியகம் உருவாகிறது தனி செயலி

கருணாநிதி அருங்காட்சியகம் உருவாகிறது தனி செயலி

கருணாநிதி அருங்காட்சியகம் உருவாகிறது தனி செயலி


ADDED : மார் 02, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பார்வையாளர்களுக்காக, மொபைல் போன் செயலி உருவாக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னை, மெரினாவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கருணாநிதி நினைவிடம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு, 20,000 சதுர அடியில் 15 அடி ஆழத்தில், கடற்கரையில், 'கலைஞர் உலகம்' என்ற பெயரில், 'டிஜிட்டல்' அருங்காட்சியம் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு, '7 டி' தொழில்நுட்ப வசதி உள்ளிட்டவைகளுடன், இரு தியேட்டர்கள் உள்ளன.

ஒரே நேரத்தில், அதிகப் படியான கூட்டத்தை இங்கு அனுமதிக்க முடியாது. குறைந்தபட்சம், 150 பேர் முதல் 200 பேர் வரை மட்டுமே, 2 மணி நேரத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்காக, மொபைல் போன் செயலியை உருவாக்கும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். பராமரிப்பு பணிகளை பொதுப்பணித் துறையும், பொது மக்களை அனுமதிக்கும் பணிகளை செய்தி துறையும் மேற்கொள்ள, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us