sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.200 கோடி நிலம் தாரைவார்ப்பு :கருணாநிதி பகீர் குற்றச்சாட்டு

/

ரூ.200 கோடி நிலம் தாரைவார்ப்பு :கருணாநிதி பகீர் குற்றச்சாட்டு

ரூ.200 கோடி நிலம் தாரைவார்ப்பு :கருணாநிதி பகீர் குற்றச்சாட்டு

ரூ.200 கோடி நிலம் தாரைவார்ப்பு :கருணாநிதி பகீர் குற்றச்சாட்டு


UPDATED : அக் 11, 2011 01:09 AM

ADDED : அக் 09, 2011 11:40 PM

Google News

UPDATED : அக் 11, 2011 01:09 AM ADDED : அக் 09, 2011 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :'சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி,தோட்டக்கலைச் சங்கம் அமைந்துள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது அல்ல என்று கூறச் செய்து, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு தாரை வார்க்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதம்:சென்னை கலெக்டர் எங்கிருந்தோ செலுத்தப்பட்ட செல்வாக்கிற்கும், நெருக்கடிகளுக்கும் பணிந்து, அரசு வழக்கறிஞரின் கருத்துரையை ஒப்புக்காகப் பெற்று, தோட்டக்கலைச் சங்கம் அமைந்துள்ள 4 காணி, 18 கிரவுண்ட், 1,683 சதுர அடி நிலம் தோட்டக்கலைச் சங்கத்திற்கே உரியது என்று அ.தி.மு.க., ஆட்சியிலே உத்தரவிட்டுள்ளார்.நிரந்தர நிலப்பதிவேட்டில் இந்த நிலம் அரசு நிலம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லங்கம் சரி பார்த்ததில், இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானதென்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த நிலம் தொடர்பாக நடந்து வரும் வழக்குகளில், எந்தக் கட்டத்திலும் இந்த நிலம் தோட்டக்கலைக்குச் சொந்தமானது என்று சொல்லப்படவில்லை.இந்த நிலம் அரசு நிலம் என்பதால் தான், தோட்டக்கலைச் சங்கத்திடமிருந்து கைப்பற்றி, தமிழக அரசின் துறைகளில் ஒன்றான தோட்டக்கலைத் துறையிடம் தி.மு.க., ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் சங்கத்திற்குச் சொந்தமானதென முடிவு செய்ய, எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அரசுக்குச் சொந்தமான இடம் என்று ஏற்கனவே முடிவு செய்ததும் கலெக்டர் தான்.



தற்போதுள்ள கலெக்டர் மூலமாக அந்த இடம் அரசுக்குச் சொந்தமானதல்ல என்று கூறச் செய்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு தாரை வார்க்க, ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க., ஆட்சியினர் செய்துள்ள இந்தப் பெரிய ஊழலை வெளிப்படுத்தியிருக்கிறேன்.இத்தேர்தலில் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமேயானால், ஊழல்கள் தொடர வழி பிறக்கும். சென்னை மாநகரத்தின் மையப்பகுதியில், 200 கோடி ரூபாய்க்கும் குறைவில்லாத மதிப்புடைய அரசு நிலம் அ.தி.மு.க., ஆட்சியாளர்களின் ஆசிகளோடும், அதிகாரிகளின் துணையோடும் அபகரிக்கப்படும் அநீதியை நல்லவர்களும், நடுநிலை நாளேடுகளும் தட்டிக் கேட்க முன்வர வேண்டாமா?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us