ADDED : நவ 20, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கேரளாவில் அடுத்த மாதம் நடக்க உள்ள, உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிட, முடிவு செய்துள்ளது.
கேரளாவில் டிச.,9 மற்றும் 11ம் தேதிகளில், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், சில பகுதிகளில், வேட்பாளர்களை நிறுத்த, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. நேற்று மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பதவிகளில், 28 பதவிகளுக்கு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இப்பட்டியலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

