ADDED : ஜன 29, 2026 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்: கேரள மாநில எல்லையான வாளையார் சோதனை சாவடியில், நேற்று மாலை, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவை நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், வாலிபர் ஒருவரிடம், 6.140 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது. அவற்றின் மதிப்பு, 7 கோடி ரூபாய்.
விசாரணையில், தங்க கட்டியை கடத்தியது ஆலப்புழா, சேர்தலாவை சேர்ந்த நிபின், 29, என்பதும், எர்ணாகுளத்திலுள்ள ரஹ்மான், 42, என்பவரது துணிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. மேலும், ரஹ்மான், தங்க கட்டிகளை கோவையை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைக்க கூறியதும் தெரிந்தது.
இதையடுத்து, தங்க கட்டிகளுடன், வருமான வரித்துறையினரிடம் நிபின் ஒப்படைக்கப்பட்டார்.

