sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கே.என்.எம்., - 1638 ரகம் நெல் கொள்முதல் துவக்கம்

/

கே.என்.எம்., - 1638 ரகம் நெல் கொள்முதல் துவக்கம்

கே.என்.எம்., - 1638 ரகம் நெல் கொள்முதல் துவக்கம்

கே.என்.எம்., - 1638 ரகம் நெல் கொள்முதல் துவக்கம்


ADDED : ஜூன் 05, 2025 11:28 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, கே.என்.எம்., - 1638 ரக நெல் கொள்முதல் துவங்கிஉள்ளது.

தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில், கே.என்.எம்., - 1638 என்ற ரக நெல்லை சாகுபடி செய்ய, மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்த நெல் ரகங்கள் வாயிலாக, அதிகளவில் மகசூல் கிடைக்கிறது. எனவே, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், இந்த ரக நெல் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இவற்றை ஆலைகளில் அரவை செய்யும் போது, 50 சதவீத அரிசி மட்டுமே கிடைக்கிறது. மற்ற நெல் ரகங்களில், 70 முதல் 80 சதவீதம் வரை கிடைக்கிறது. இதனால், அரிசி ஆலைகள், இந்த ரக நெல்லை அரவை செய்ய தயக்கம் காட்டுகின்றன.

இதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, இந்த ரக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு இருந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியேயும், உலர் களங்களிலும் பல டன் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் மே 26ல் வெளியானது.

இது அரசின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, தற்போது கே.என்.எம்., - 1638 ரக நெல் கொள்முதல் துவங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆனால், கொள்முதல் தாமதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் மழை பெய்வதால், நெல் கொள்முதலை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us