sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

/

மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

1


ADDED : ஏப் 04, 2025 10:28 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 10:28 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மருதமலை முருகன் கோவிலில் இன்று (ஏப்ரல் 04) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கடந்த ஜனவரி மாதம், பாலாலயம் செய்யப்பட்டது. கடந்த, மார்ச் 31ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று கும்பாபிஷேகம் நடப்பதால், தேவையான கோவில் திருப்பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். கோவில் உட்புறத்தில் உள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, புதிய தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டது.

இன்று வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்செய்தனர். அடிவாரத்தில் காத்திருக்கும் பக்தர்களும், கும்பாபிஷேகத்தை நேரலையில் காணும் வகையில், பெரிய திரைகள் அமைக்கப்பட்டது.

பாதுகாப்பு பணிகளில், 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அடிவாரத்தில் இருந்து மலை மேல் பக்தர்கள் வந்து செல்லும் பாதை முழுவதும், நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us