சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக லட்சுமி நியமனம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக லட்சுமி நியமனம்
UPDATED : மார் 20, 2025 05:12 PM
ADDED : மார் 20, 2025 04:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்து உள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த பிரவேஷ் குமார் - சென்னை போலீஸ் வடக்கு கூடுதல் கமிஷனர் ஆகவும்,
போலீஸ் அமலாக்கப் பிரிவு ஐ.ஜி., லட்சுமி- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆகவும்,
சென்னை போலீஸ் வடக்கு கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் - போலீஸ் அமலாக்கப் பிரிவு ஐ.ஜி., ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.