sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லலிதா ஜுவல்லரி: ரூ.1,700 கோடி திரட்ட ஒப்புதல்

/

லலிதா ஜுவல்லரி: ரூ.1,700 கோடி திரட்ட ஒப்புதல்

லலிதா ஜுவல்லரி: ரூ.1,700 கோடி திரட்ட ஒப்புதல்

லலிதா ஜுவல்லரி: ரூ.1,700 கோடி திரட்ட ஒப்புதல்


ADDED : அக் 08, 2025 03:41 AM

Google News

ADDED : அக் 08, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையைச் சேர்ந்த லலிதா ஜுவல்லரி மார்ட், மூலதன சந்தை ஒழுங்கு முறை அமைப்பான, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான, 'செபி'யிடம் இருந்து, இறுதி கண்காணிப்பை பெற்று, ஆரம்ப பொது பங்கு வழங்கல் வாயிலாக, 1,700 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.

இந்நிறுவனம், கடந்த ஜூன் 6ல், செபியிடம், தனது ஐ.பி.ஓ., ஆவணங்களை தாக்கல் செய்தது. இந்த ஐ.பி.ஓ.,வில், 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியீடு மற்றும் நிறுவனர் கிரண் குமார், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கான சலுகை ஆகியவை அடங்கும்.

புதிய வெளியீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம், 1,014.50 கோடி ரூபாய் வரை, இந்தியாவில் புதிய கடைகளை அமைக்க, மூலதன செலவினங்களுக்கு நிதியளிக்கும்.

பொது நோக்கங்களுக்காகவும் இருக்கும்.

லலிதா ஜுவல்லரி மார்ட், முதல் தங்க நகை விற்பனை கடையை, 1985ல் சென்னை தி.நகரில் துவக்கியது.

இது, தென் மாநிலங்களில், 56 நகைக் கடைகள் வாயிலாக பி.ஐ.எஸ்., ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்கிறது.






      Dinamalar
      Follow us