sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நில அபகரிப்பு: கல்விக் குழும தலைவருக்கு முன் ஜாமின்

/

நில அபகரிப்பு: கல்விக் குழும தலைவருக்கு முன் ஜாமின்

நில அபகரிப்பு: கல்விக் குழும தலைவருக்கு முன் ஜாமின்

நில அபகரிப்பு: கல்விக் குழும தலைவருக்கு முன் ஜாமின்


ADDED : செப் 16, 2011 11:39 PM

Google News

ADDED : செப் 16, 2011 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில், நில அபகரிப்பு வழக்கில், வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கத்திற்கு, ஐகோர்ட் கிளை நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் சமையாள்,55. இவருக்கு, 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இருந்தது. அதை, குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டுவதாக, முத்துராமலிங்கம் மற்றும் கல்விக் குழும ஊழியர் மீது, சமையாள் புகார் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன், நிலத்திற்குச் சென்ற தன்னை மிரட்டியதாக, அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து முத்துராமலிங்கம், ஊழியர் திருப்பதி வெங்கடேசன், கட்டட ஒப்பந்தக்காரர் விஜய்ஆனந்த் மீது, வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில், முன் ஜாமின் கோரிய முத்துராமலிங்கம் மனு, நேற்று நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கதிர்வேலு ஆஜரானார். முன் ஜாமின் வழங்க, அரசு வழக்கறிஞர் ராமர் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும், நிபந்தனை முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us