sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: வாசன்

/

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: வாசன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: வாசன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: வாசன்


ADDED : ஆக 04, 2025 06:14 AM

Google News

ADDED : ஆக 04, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: ''தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை நடப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,'' என, மதுரையில் த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து 2 மாதங்களுக்குள் திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார், திருநெல்வேலி கவின் ஆணவக்கொலை போன்றவை நடந்து மக்களுக்கு கொடுத்துள்ளது.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாததாக அரசு செயல்படுவது, அதன் செயலற்ற திறனை எடுத்துக்காட்டுகிறது. போதை பொருட்கள் விற்பதை நிறுத்தும் சக்தி இந்த அரசுக்கு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதற்கு டாஸ்மாக் ஆதிக்கமும் காரணம்.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் நிலையை இந்த அரசு எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்து உறுப்பினர்களையும் ஆளுங்கட்சிக்கு மக்கள் கொடுத்தனர். ஆனால் உறுப்பினர்களின் செயல்பாட்டில் மக்கள் ஏமாற்றமடைந்து இருக்கின்றனர்.

லோக்சபா குறித்து கவலைப்படாத உறுப்பினர்கள், அதனை நடத்த விடாமல் முடக்குவது ஏற்புடையது அல்ல. பீகாரிலும், தமிழகத்திலும் வாக்காளர்கள் பிரச்னையை கிளப்ப நினைப்பது சரியானது அல்ல. மக்கள் அதை ஏற்க தயாராக இல்லை என்றார்.






      Dinamalar
      Follow us