ADDED : ஜன 25, 2025 03:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரகுபதிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.