sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விமான விபத்து செய்தி வெளியிட விதிமுறை வகுக்க கோரி வழக்கு

/

விமான விபத்து செய்தி வெளியிட விதிமுறை வகுக்க கோரி வழக்கு

விமான விபத்து செய்தி வெளியிட விதிமுறை வகுக்க கோரி வழக்கு

விமான விபத்து செய்தி வெளியிட விதிமுறை வகுக்க கோரி வழக்கு


ADDED : ஜூலை 18, 2025 08:31 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிட, உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த பிரவீன் என்பவர் தாக்கல் செய்த மனு:

குஜராத் மாநிலம் ஆமதாபாதில், ஜூன் 12ம் தேதி, லண்டனுக்கு புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்கு உள்ளானது; 241 பேர் உயிரிழந்தனர்.

விமானம் விழுந்த மருத்துவ வளாகத்தில் இருந்த 19 பேர் இறந்தனர்.

இந்த விமான விபத்திற்கு, 'பைலட்' தான் காரணம் என பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. அந்த விமானத்தை ஓட்டிய பைலட்டும் விபத்தில் பலியானார். அவர் தான் தவறு செய்தார் என, ஊடகங்களுக்கு எப்படி தெரியும்?

உரிய விசாரணை எதுவும் செய்யாமல் செய்திகளை வெளியிட்டு, பைலட் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது களங்கத்தை ஏற்படுத்தி காயப்படுத்துகின்றனர். இதேபோல பல விமான விபத்துகளிலும் உண்மையை ஆராயாமல் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவே, விமான விபத்துகள் தொடர்பான உண்மையை ஆய்வு செய்து, ஊடகங்கள் செய்திகளை வெளியிட, வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி, மத்திய விமான போக்குவரத்து துறை செயலருக்கு, கடந்த 14ம் தேதி மனு அனுப்பினேன்.

அந்த மனுவை பரிசீலித்து, ஊடகங்கள் செய்தி வெளியிடுவது குறித்த வழிகாட்டு விதிகளை வகுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us