sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மரம் ஏறும் தொழிலாளி கொலை: வக்கீல், மனைவி குடும்பம் கைது

/

மரம் ஏறும் தொழிலாளி கொலை: வக்கீல், மனைவி குடும்பம் கைது

மரம் ஏறும் தொழிலாளி கொலை: வக்கீல், மனைவி குடும்பம் கைது

மரம் ஏறும் தொழிலாளி கொலை: வக்கீல், மனைவி குடும்பம் கைது


ADDED : மார் 18, 2024 01:33 AM

Google News

ADDED : மார் 18, 2024 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் கணேசன், 46. இவரது மனைவி தீபா. இரு குழந்தைகள் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் தீபா குழந்தைகளுடன் சென்னை சென்றார்.

கணேசன் உத்தமபாளையத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை உ.அம்மாபட்டி ரோடு தாலுகா அலுவலகம் அருகே கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட அடையாளங்களுடன் கணேசன் இறந்து கிடந்தார்.

அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். உ.அம்மாபட்டி பைபாஸ் ரோட்டில், நள்ளிரவில் டூ - வீலர் ஒன்றில் மூன்று பேர் அமர்ந்து செல்வது பதிவாகியிருந்தது.

கூர்ந்து ஆய்வு செய்த போது கணேசன் நடுவில் அமர வைக்கப்பட்டு, பின்புறம் வக்கீல் சுரேஷ் அமர்ந்தும், டூ - வீலரை சுரேஷ் மாமனார் முருகன் ஓட்டிச் செல்வதும் தெரிந்தது.

சுரேஷ், அவரது மனைவி ஜமுனா, மாமனார் முருகன், மாமியார் முருகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

விசாரித்ததில், ஜமுனா வுடன் கணேசன் கள்ளத்தொடர்பில் இருந்ததும், அதனால், சுரேஷ் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து கணேசனை கொலை செய்தததும் தெரிந்தது.






      Dinamalar
      Follow us