sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேட்டைக்கு வந்த சிறுத்தை இரவில் செல்ல மக்களுக்கு தடை

/

வேட்டைக்கு வந்த சிறுத்தை இரவில் செல்ல மக்களுக்கு தடை

வேட்டைக்கு வந்த சிறுத்தை இரவில் செல்ல மக்களுக்கு தடை

வேட்டைக்கு வந்த சிறுத்தை இரவில் செல்ல மக்களுக்கு தடை


ADDED : ஜன 23, 2025 05:55 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் அருகே, சிறுத்தை காட்டு பன்றியை வேட்டையாடி போது, வாகனங்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன; இரவில் மக்கள் தனியாக நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் இரவு நேரத்தில் வரும் சிறுத்தைகள் வளர்ப்பு நாய்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வேட்டையாடி செல்கின்றன.

இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு கம்பிசோலை பஸ் ஸ்டாப் அருகே சிறுத்தை நடமாட்டத்தை பார்த்த ராணுவ பாதுகாவலர்கள், அந்த பகுதியில் சிறிது நேரம் மக்கள் நடந்து செல்ல தடை விதித்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், அரை மணி நேரம் சாலையில் யாரும் செல்லவில்லை.

மாலை, 6:00 மணிக்கு சிறுத்தை ஆரோக்கியபுரம் முத்தம்மா சேரி பகுதிக்கு வந்து, காட்டு பன்றியை வேட்டையாடி இழுத்து சென்றதை மக்கள் பார்த்துள்ளனர்.

அங்கு வந்த வனத்துறையினர், 'அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், இரவு நேரத்தில் தனியாக யாரும் அந்த சாலையில் யாரும் செல்ல வேண்டாம்,' என தடை விதித்தனர். கட்டபெட்டு ரேஞ்சர் செல்வகுமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us