/
செய்திகள்
/
தமிழகம்
/
வெடிக்கலாம்! * தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பசுமைப் பட்டாசு... * 6 ஆண்டாக இருந்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட் * காலை ஒரு மணி நேரம், இரவில் 2 மணி நேரம் அனுமதி
/
வெடிக்கலாம்! * தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பசுமைப் பட்டாசு... * 6 ஆண்டாக இருந்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட் * காலை ஒரு மணி நேரம், இரவில் 2 மணி நேரம் அனுமதி
வெடிக்கலாம்! * தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பசுமைப் பட்டாசு... * 6 ஆண்டாக இருந்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட் * காலை ஒரு மணி நேரம், இரவில் 2 மணி நேரம் அனுமதி
வெடிக்கலாம்! * தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பசுமைப் பட்டாசு... * 6 ஆண்டாக இருந்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட் * காலை ஒரு மணி நேரம், இரவில் 2 மணி நேரம் அனுமதி
ADDED : அக் 15, 2025 11:17 PM

புதுடில்லி:தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை பசுமைப் பட்டாசு விற்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், தீபாவளிக்கு முதல் நாள் மற்றும் தீபாவளி நாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரம் பசுமைப் பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டில்லி, அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகள் இணைந்த என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், காற்று மாசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .
மறுபரிசீலனை அதன் ஒரு பகுதியான, பட்டாசு விற்கவும் வெடிக்கவும் 2018ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
அதேபோல, கடந்த ஆண்டு அக். 14ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜன. 1ம் தேதி வரை பசுமைப் பட்டாசு உட்பட அனைத்து வகையான பட்டாசும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி பசுமைப் பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை கடந்த செப்டம்பர் 26ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், அனுமதி பெற்ற தயாரிப்பாளர்கள் மட்டும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால், விற்பனை செய்ய அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து, பசுமைப் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் டில்லி அரசு சார்பில் பண்டிகை காலத்தில் மட்டும் பசுமைப் பட்டாசு விற்பனைக்கும் வெடிக்கவும் அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த, 10ம் தேதி விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜாரானார்.
நீதிபதிகள், 'பட்டாசு வெடிக்க தடை விதித்த 2018ல் இருந்து டில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு குறைந்துள்ளதா' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காற்று மாசு அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மட்டுமே காற்று மாசு சற்று குறைந்தது. அதற்குப் பின், காற்று மாசு மோசமான நிலையில் தான் இருக்கிறது.
''அதேநேரத்தில், பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை செயல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் மட்டும் ஓரிரு நாட்களுக்கு குழந்தைகள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும்,”என்றார்.
நீதிபதிகள், 'தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பது சிறப்பான முடிவு இல்லை. நடுநிலையுடன் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது' எனக்கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை மற்றும் வாதங்கள் ஏற்கனவே நிறைவடைந்திருந்த நிலையில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
அக். 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யலாம். தீபாவளி நாளிலும் அதற்கு முதல் நாளிலும் மட்டும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரையில் பசுமைப் பட்டாசு வெடிக்கலாம். இதர பட்டாசு வகைகளை விற்பதும், வெடிப்பதும் தண்டனைக்குரிய குற்றம். இதை, டில்லி அரசு, மாநகரப் போலீஸ், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை கண்காணிக்க வேண்டும். மேலும், 'ஆன் - லைன்' வாயிலாக பசுமைப் பட்டாசு விற்க அனுமதி இல்லை. உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பசுமைப் பட்டாசால் காற்றில் துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் பரவுவது 30 சதவீதம் வரை குறைகிறது என அறிக்கை அளித்துள்ளதால் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ள இரு நாட்களின் காற்று மாசு அளவை மாநில மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேநேரத்தில், அண்டை மாநிலத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விற்கக் கூடாது. போலீசார் கண்காணித்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், விற்பனை செய்தவரின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

