sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை 'ஆயுள்'

/

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை 'ஆயுள்'

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை 'ஆயுள்'

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை 'ஆயுள்'

1


ADDED : ஜூலை 15, 2025 06:23 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 06:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்,; ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட கொடூரனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி திருப்பத்துார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூரை சேர்ந்தவர் டெய்லரிங் தொழிலாளி ரேவதி, 36. இவர், நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இந்தாண்டு பிப்., 6ல், ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த மங்கள சமுத்திரத்திலுள்ள தாய் வீட்டிற்கு செல்ல, திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், பெண்கள் பொது பெட்டியில் பயணித்தார்.

ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் சென்றவுடன், ரேவதி மட்டும் அப்பெட்டியில் தனியாக இருந்தார். அப்போது, வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ், 27, ரயிலில் ஏறி, ரேவதியை தாக்கி, அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். எதிர்ப்பு தெரிவித்த ரேவதியை, குடியாத்தம் -- கே.வி.குப்பம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே சென்றபோது, ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். ரயில் காட்பாடி சென்றவுடன் ஹேமராஜ் தப்பினார்.

ரயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட‍து. அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரேவதியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ரயிலில் இருந்து விழுந்ததில் ரேவதியின் கர்ப்பம் கலைந்தது. போலீசார் எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, ஹேமராஜை, பிப்., 7ல் கைது செய்தனர்.

இந்த வழக்கு, திருப்பத்துார் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, நேற்று ஹேமராஜுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை, 60,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு, ரயில்வே துறை இணைந்து 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us