sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கறவை மாடு பராமரிக்க விவசாயிகளுக்கு கடன்

/

கறவை மாடு பராமரிக்க விவசாயிகளுக்கு கடன்

கறவை மாடு பராமரிக்க விவசாயிகளுக்கு கடன்

கறவை மாடு பராமரிக்க விவசாயிகளுக்கு கடன்


ADDED : மே 23, 2025 12:40 AM

Google News

ADDED : மே 23, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் பராமரிப்புக்கு, விவசாயிகள் கடன் அட்டை வாயிலாக சிறு கடன் பெற விண்ணப்பிக்கலாம்' என, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கால்நடை வளர்ப்போர் பயன் பெற, 'விவசாயிகள் கடன் அட்டை' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பசு, எருமை உள்ளிட்ட கறவை மாடுகள் பராமரிப்புக்காக, ஆண்டுக்கு தலா ஒன்றுக்கு 14,000 ரூபாய்; ஆடு ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் சிறு கடன் வழங்கப்படுகிறது.

கால்நடை வைத்திருப்போர், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகங்களில் கடன் விண்ணப்பங்களை பெறலாம். பொதுத்துறை வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்கப்படுகிறது.

ஆறு மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு வட்டி இல்லை. ஆறு மாதங்களுக்கு மேல் குறைந்தபட்ச வட்டி செலுத்த வேண்டும். விருப்பம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us