ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்
ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்
ADDED : ஜூலை 12, 2011 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம், பேராவூரில் உள்ள ரேஷன் கடையில் பெருவயல் கலையனூரை சேர்ந்த பூங்கோதை விற்பனையாளராக உள்ளார்.
பேராவூர் ஊராட்சி தலைவராக இருக்கும் முருகேசன், தனது மைத்துனர் முத்துக்கூரி இல்லாமல் கடையை திறக்க கூடாது என மிரட்டியுள்ளார். முத்து கூரி, தான் சொல்லும் நபர்களுக்குத்தான் இலசவ அரிசி, சீனி வழங்க வேண்டும் என, மிரட்டியுள்ளார்.
கடந்த 8ம் தேதி கடையை திறக்க சென்ற, பூங்கோதையை கடையை திறக்கவிடாமல் முத்துக்கூரி, அவரது உறவினர் போஸ் ஆகியோர் அடித்துள்ளனர். நடவடிக்கை எடுக்குமாறு கேணிக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். இப்பிரச்னையால் தற்போது ரேஷன் கடை திறக்கப்படவில்லை.போராட்டத்தை கலைக்கச் செய்தது சிதம்பரமே.