தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ லோக் அதாலத்: 90,000 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்: 90,000 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்: 90,000 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : செப் 14, 2025 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில், நிலுவை யில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.

அதன்படி, தேசிய அளவில் நேற்று லோக் அதாலத் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில், மூன்று அமர்வுகளும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்டன.

மாவட்டம், தாலுகா அளவில், நீதிபதிகள் தலைமையில், தமிழகம் முழுதும் 501 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இந்த அமர்வுகள், 90,892 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளன.

இதன் வாயிலாக, 718 கோடியே, 74 லட்சத்து, 11,339 ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us