ADDED : பிப் 07, 2024 03:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: லோக்சபா தேர்தலில் 14 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.
சென்னையில் தே.மு.தி.க., பொதுக்குழ கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் சொந்த கருத்தை பகிர்ந்தனர். பெரும்பாலானோர், தனித்து போட்டியிடுவோம் என கருத்து பகிர்ந்தனர். இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. இனிமேல் கூட்டணி அமைத்து பேசுவோம்.
வரும் லோக்சபா தேர்தலில் 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

