காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்
காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்
UPDATED : ஜன 07, 2024 02:25 PM
ADDED : ஜன 07, 2024 02:24 PM

சென்னை: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ‛கலைஞர் 100' நிகழ்ச்சியில் ரசிகர்கள் குறைவாகவே பங்கேற்றனர். குறிப்பாக முக்கிய நடிகரான ரஜினி பேசும்போது கூட காலி இருக்கைகளே தென்பட்டன. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று (ஜன.,6) நடைபெற்றது. இதில் எதிர்பார்த்த அளவு கூட்டமே இல்லாததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வளவு பெரிய மைதானத்தில் ஆங்காங்கே மட்டும் சிலர் அமர்ந்திருந்தனர்.
நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் தவிர மற்ற பெரிய நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், கன்னட நடிகர் சிவராஜ் குமார் தவிர யாருமே வரவில்லை. முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவும் வரவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு மக்களும், திரைப்பிரபலங்களும் வராமல் சொதப்பல் நிகழ்ச்சியாக மாறியதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் எனக் சொல்லப்படுகிறது.