sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 வரும் 9 முதல் லாரி 'ஸ்டிரைக்'

/

 வரும் 9 முதல் லாரி 'ஸ்டிரைக்'

 வரும் 9 முதல் லாரி 'ஸ்டிரைக்'

 வரும் 9 முதல் லாரி 'ஸ்டிரைக்'


ADDED : டிச 02, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 02, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலர் சண்முகப்பா வேலுாரில் நேற்று கூறியதாவது:

லாரிகளுக்கான எப்.சி., கட்டணம் ஆண்டுக்கு, 850 ரூபாயாக இருந்தது; இதை, 33,000 ரூபாய் வரை உயர்த்தி, மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கட்டண உயர்வை அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்துவதோ, நிறுத்துவதோ அவர்கள் முடிவு.

ஜார்க்கண்ட் அரசு கட்டண உயர்வை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்து விட்டது. இதுபோல தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது. தமிழக அரசு முடிவு எடுக்கும் வரை, வரும் 9ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

தமிழக அரசு சாதகமான முடிவு எடுக்காவிட்டால், ரேஷன் அரிசி, பால் உட்பட அத்தியாவசிய சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகள், டெல்டா பகுதிகளில் நெல் ஏற்றி செல்லும் லாரிகள் உட்பட அனைத்து லாரிகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us