தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'எம் - சாண்ட்' விற்பனை என்.எல்.சி.,யில் தொடக்கம்

 'எம் - சாண்ட்' விற்பனை என்.எல்.சி.,யில் தொடக்கம்

 'எம் - சாண்ட்' விற்பனை என்.எல்.சி.,யில் தொடக்கம்


ADDED : மே 27, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தயாரிக்கப்படும், 'எம் - சாண்ட்' மணல் விற்பனை பணிகளை, தமிழக கனிமவளத்துறை தொடங்கி உள்ளது.

கடலுார் மாவட்டத்தில், மத்திய அரசின் என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சார்பில், நிலக்கரி எடுப்பதற்கான சுரங்க பணிகள் நடக்கின்றன.

இதில் கிடைக்கும் கருங்கல் பாறைகளை பயன்படுத்தி, 'எம் - சாண்ட்' மணல் தயாரிக்கப்படுகிறது. அதை விற்கும் பணிகள், தமிழக அரசின் கனிமவளத்துறை வாயிலாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தயாரிக்கும் எம் - சாண்ட், பொது மக்களுக்கு விற்கப்பட உள்ளது. மொத்த விற்பனை அடிப்படையில், எம் - சாண்ட் வாங்குவதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய இருக்கிறோம்.

தற்போதைய நிலவரப்படி ஒரு டன், 330 ரூபாய் விலையில், எம் - சாண்ட் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு மாதத்துக்கு, 32,000 டன் அளவுக்கு எம் - சாண்ட், ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு, ஆற்று மணல் கிடைக்காத நிலையில், எம் - சாண்ட் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதில் தரமான எம் - சாண்ட் எங்கு கிடைக்கும் என்று தேடும் மக்களுக்கு, இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என, கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us