sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பெண் உட்பட மேலும் 4 பேர் கைது

/

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பெண் உட்பட மேலும் 4 பேர் கைது

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பெண் உட்பட மேலும் 4 பேர் கைது

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பெண் உட்பட மேலும் 4 பேர் கைது


ADDED : செப் 10, 2025 01:32 AM

Google News

ADDED : செப் 10, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாநகராட்சியில் ரூ. பல கோடி சொத்துவரி முறைகேடு தொடர்பாக பெண் உட்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாநகராட்சியில் 2022, 2023 ல் தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து இரண்டு மாதங்களாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது மதுரை டி.ஐ.ஜி., அபினவ்குமார் தலைமையில் விசாரணை நடக்கிறது.இவ்வழக்கில் இதுவரை மேயரின் கணவர் பொன்வசந்த், உதவி கமிஷனர், முன்னாள் உதவி கமிஷனர், பில் கலெக்டர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் என 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் பில்லிங் பிரிவில் பணியாற்றும் தற்காலிக பணியாளர் லீமா ரோஸ் மேரி, மண்டலம் 3 அலுவலக உதவியாளர் சங்கையா, மண்டலம் 4ன் தற்காலிக பணியாளர் பிரேம், பில் கலெக்டர் ராஜ்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

கம்ப்யூட்டர் ஆபரேட்டரிடம் விசாரணை: மாநகராட்சிக்கு பிரதான கம்ப்யூட்டர் ஆபரேட்டரான (ஏ.பி.,) லோகேஷ் பிரபுவிடமும் நேற்றுமுன்தினம் இரவு விசாரணை நடந்தது.

முறைகேடு புகார் காலத்தில் இவரது கண்ட்ரோலில் தான் மாநகராட்சியின் சர்வர், பாஸ்வேர்டு ஐ.டி.,க்கள் இருந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், 'மீண்டும் போலீஸ் அழைத்தால் தவறாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us