sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"பார்வையிழப்புக்கு முக்கிய காரணம் கண் புரையே'

/

"பார்வையிழப்புக்கு முக்கிய காரணம் கண் புரையே'

"பார்வையிழப்புக்கு முக்கிய காரணம் கண் புரையே'

"பார்வையிழப்புக்கு முக்கிய காரணம் கண் புரையே'


ADDED : செப் 09, 2011 08:37 AM

Google News

ADDED : செப் 09, 2011 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'உலகிலேயே நம் நாட்டில் தான், அதிக பார்வையிழப்பு ஏற்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணமான கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்'' என, சங்கர நேத்ராலயா நிர்வாக அதிகாரி இளங்கோவன் கூறினார். அண்ணா நகரில் உள்ள மூத்த குடிமக்கள் அமைப்பும், 'நைட்டிங்கேல்' மகளிர் சங்கமும் இணைந்து, பொதுமக்கள் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில், கண் புரை, நீரிழிவு விழித்திரை, கண் அழுத்த நோய், கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் மற்றும் குழந்தைகள் கண் நலம் குறித்து விளக்கப்பட்டது. கண் புரை குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியும் நடந்தது.

இதில், 11 சதவீதம் பேர், 'கண் புரையைக் குணமாக்க முடியாது; 31 சதவீதம் பேர், சொட்டு மருந்துகளால் குணமாக்க முடியும்; 22 சதவீதம் பேர், கண்ணாடி அணிவதால் குணமாக்க முடியும்' என குறிப்பிட்டனர். சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ சமூகவியலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி இளங்கோவன் கூறும் போது, ''உலகிலேயே நம் நாட்டில் தான் அதிகப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமான கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். மருத்துவத் துறையின் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, கண் புரை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்றார்.








      Dinamalar
      Follow us