ADDED : ஆக 02, 2025 07:37 PM
சென்னை:சேலம் ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - கோவை உட்பட, ஏழு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
l சென்ட்ரல் - கோவை காலை, 6:10 விரைவு ரயில், வரும் 8, 15ம் தேதிகளில், மாற்றுப் பாதையில் செல்வதால், கோவை செல்லாமல் போத்தனுார் செல்லும்
l சென்ட்ரல் - கோவை காலை, 7:15 மணி சதாப்தி விரைவு ரயில், வரும் 8, 15ம் தேதிகளில், மாற்றுப்பாதையில் செல்வதால், கோவை செல்லாது. போத்தனுாருக்கு இயக்கப்படும்
l கேரள மாநிலம் எர்ணாகுளம் - கர்நாடகா மாநிலம் பெங்களூரு காலை, 9:10 மணி இன்டர்சிட்டி விரைவு ரயில், வரும் 8, 10, 15, 17ம் தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், கோவை செல் லாது. அதற்கு மாற்றாக, போத்தனுாரில் நின்று செல்லும்
l கேரள மாநிலம் ஆலப்புழா - ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் காலை, 6:00 மணி ரயில், வரும் 10, 17ம் தேதிகளிலும், தாம்பரம் - கர்நாடகா மாநிலம் மங்களூரு இரவு 11:50 மணி விரைவு ரயில், வரும், 16ம் தேதியன்றும், மாற்றுப்பாதையில் செல்வதால், கோவைக்கு செல்லாது. போத்தனுாரில் நின்று செல்லும்
l பீ ஹார் மாநிலம் பாட்னா - கேரள மாநிலம் எர்ணாகுளம், மதியம் 2:00 மணி விரைவு ரயில், வரும் 15ம் தேதியிலும், அசாம் மாநிலம் திப்ரூகர் - கன்னியாகுமரி இரவு 7:35 மணி விரைவு ரயில், வரும் 14ம் தேதியன்றும், மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. இதனால், கோவைக்கு செல்லாது, போத்தனுாரில் நின்று செல்லும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.