ADDED : ஜன 16, 2024 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : சபரிமலையில் மகரவிளக்கு தரிசனத்தின் போது மூணாறில் அனுமன்மேட்டில் 30,001 மகர தீபங்கள் ஏற்றப்பட்டன.
மூணாறில் உள்ள காளியம்மன் நவகிரகம் கிருஷ்ணர் கோயில் சார்பில் சபரிமலையில் மகரவிளக்கின் போது அருகில் உள்ள அனுமன் மேட்டில் மகர தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி 22ம் ஆண்டை முன்னிட்டு நேற்று அனுமன் மேட்டில் 30,001 தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன்பிறகு வான வேடிக்கையும் நடந்தது. கோயிலில் லட்சுமி குபேர பூஜையும், அன்னதானமும் நடந்தது. பத்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.