sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'கடைசி நேரத்துல ஓடி போயிறாதீங்க' வைகோவுக்கு மல்லை சத்யா 'அட்வைஸ்'

/

'கடைசி நேரத்துல ஓடி போயிறாதீங்க' வைகோவுக்கு மல்லை சத்யா 'அட்வைஸ்'

'கடைசி நேரத்துல ஓடி போயிறாதீங்க' வைகோவுக்கு மல்லை சத்யா 'அட்வைஸ்'

'கடைசி நேரத்துல ஓடி போயிறாதீங்க' வைகோவுக்கு மல்லை சத்யா 'அட்வைஸ்'

4


ADDED : ஆக 03, 2025 03:38 AM

Google News

ADDED : ஆக 03, 2025 03:38 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: “கடந்த 2001, 2006 சட்டசபை தேர்தல்களைப் போல, வரும் தேர்தலின்போது கடைசி நேரத்தில், தி.மு.க., கூட்டணியிலிருந்து ஓடிவிடக்கூடாது,” என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்தார்.

வைகோவின் மகனும், ம.தி.மு.க., முதன்மைச் செயலருமான துரை உடன் ஏற்பட்ட மோதலால், கட்சிப் பணிகளில் இருந்து சத்யா ஒதுங்கியுள்ளார். இந்நிலையில், துரோகி என வைகோ குற்றஞ்சாட்டியதால் கொந்தளித்த மல்லை சத்யா, வைகோவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.

இச்சூழலில் யார் துரோகி எனக்கேட்டு, சென்னை, சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், மல்லை சத்யா நேற்று உண்ணாவிரதம் இருந்தார். இதில், நுாற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது, அவர் பேசியதாவது:



கடந்த, 28 ஆண்டுகளாக ஜனநாயகவாதியாக இருந்த வைகோ, மகன் வந்ததும் மறுமலர்ச்சி தி.மு.க.,வை, 'மகன் தி.மு.க.,' என மாற்றி விட்டார். கட்சி துவக்கப்பட்ட காலத்திலிருந்து உழைத்தவர்களுக்கு, எந்த மரியாதையும் இல்லை. மகனுக்காக என்னை துரோகி என, வைகோ கூறியுள்ளார். இதற்கு நீதி கேட்டு தான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, வைகோ கூறி வருகிறார்.

கடைசி வரை, அவர் அதில் உறுதியாக இருக்க வேண்டும். கடந்த 2001, 2006 சட்டசபை தேர்தல்களின்போது, தி.மு.க., கூட்டணியிலிருந்து, கடைசி நேரத்தில் ஓடியதை இன்றும் யாரும் மறக்கவில்லை. அதுபோல, வரும் 2026 சட்டசபை தேர்தலின்போது ஓடிவிடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us