'ரிசர்வ் வங்கி' அதிகாரி என கூறி ரூ.20 கோடி மோசடி செய்தவர் கைது
'ரிசர்வ் வங்கி' அதிகாரி என கூறி ரூ.20 கோடி மோசடி செய்தவர் கைது
ADDED : ஆக 10, 2025 01:50 AM
சேலம்:'ரிசர்வ் வங்கி அதிகாரிகள்' என கூறி அறிமுகமான சிலர், 'இரிடியம், காப்பர்' விற்பனை செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் எனவும் மக்களிடம் ஆசை காட்டியுள்ளனர்.
இதை நம்பி முதலீடு செய்தவர்கள் அளித்த புகாரை, சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அப்போது சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில், 150 பேரிடம், 13 கோடி ரூபாயை அந்த கும்பல் மோசடி செய்தது தெரிந்தது. இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தர்மபுரி, பொம்மிடியை சேர்ந்த மாரிமுத்து, 45, என்பவர், ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 'இரிடியம்' விற்க அனுமதி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
அவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோரிடம், போலி ஆவணங்களை காட்டி, 20 கோடி ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. நேற்று அவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.