sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்தவர் கைது

/

அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்தவர் கைது

அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்தவர் கைது

அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்தவர் கைது


ADDED : அக் 09, 2025 02:29 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் காலனி மாரியம்மன் கோவில் பின்புறம் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக பண்ருட்டி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, ஜெயமூர்த்தி, நுண்ணறிவு பிரிவு போலீசார் பாண்டியன், மணிகண்டன், முருகன், சுரேஷ் தென்னரசு ஆகியோர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.

சோதனையில் திருவாமூர் சுப்ரமணி மகன் வெற்றிவேல் என்பவர் வீட்டிற்கு அருகாமையில் நாட்டு வெடிகள் தயாரித்தது தெரியவந்தது. தொடர்ந்து 30 கிலோ வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்ததாக திருவாமூரை சேர்ந்த வெற்றிவேல்,51; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us