ADDED : ஜன 30, 2026 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் புகுந்து 3 சவரன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று மணிகூண்டு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில், கடலுார், திருப்பாதிரிபுலியூர் ஆறுமு கம் மகன் சதீஷ் குமார், 28; என்பதும், கடந்த 27ம் தேதி முதுநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சண்முகம் மனைவி திரிபுரசுந்தரி வீட்டில் புகுந்து 3 சவரன் திருடி சென்றதும் தெரிந்தது. உடன், அவரை போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

