sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொலை வழக்கில் 7 ஆண்டு தண்டனை பெற்றவருக்கு ஆயுள்

/

கொலை வழக்கில் 7 ஆண்டு தண்டனை பெற்றவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் 7 ஆண்டு தண்டனை பெற்றவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் 7 ஆண்டு தண்டனை பெற்றவருக்கு ஆயுள்


ADDED : ஜன 30, 2025 10:46 PM

Google News

ADDED : ஜன 30, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; துாத்துக்குடி மாவட்டம் முறம்பனில் நடந்த கொலை வழக்கில் ஒருவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆயுள் தண்டனை விதித்தது.

முறம்பனைச் சேர்ந்தவர் செந்துார். இவர் தன் மனைவியுடன் அதே பகுதி கோபால்சாமிக்கு 60, தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டார். செந்துார் தாக்கியதில் கோபால்சாமி காயமடைந்தார். ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அவர் இறந்தார். செந்துார் மீது மணியாச்சி போலீசார் வழக்கு பதிந்தனர். அவருக்கு காயம் விளைவித்தல் பிரிவில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது துாத்துக்குடி விரைவு நீதிமன்றம்.

இதை எதிர்த்து செந்துாரும், கொலைக் குற்றத்திற்குரிய பிரிவில் தண்டனை விதிக்க கேட்டு மணியாச்சி இன்ஸ்பெக்டரும் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு: எதனால் மரணம் ஏற்பட்டது என்பதை கீழமை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை. செந்துாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. கீழமை நீதிமன்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டு செந்துாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us