sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எஸ். ஐ., தேர்வில் மொபைலை பயன்படுத்தி தேர்வு எழுதிய ஏட்டுக்கு கட்டாய ஓய்வு

/

எஸ். ஐ., தேர்வில் மொபைலை பயன்படுத்தி தேர்வு எழுதிய ஏட்டுக்கு கட்டாய ஓய்வு

எஸ். ஐ., தேர்வில் மொபைலை பயன்படுத்தி தேர்வு எழுதிய ஏட்டுக்கு கட்டாய ஓய்வு

எஸ். ஐ., தேர்வில் மொபைலை பயன்படுத்தி தேர்வு எழுதிய ஏட்டுக்கு கட்டாய ஓய்வு

1


ADDED : நவ 24, 2024 08:40 AM

Google News

ADDED : நவ 24, 2024 08:40 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார், 36. இவர், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் திருச்சியில் நடைபெற்ற எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் பங்கேற்றார்.

அப்போது, மொபைல் போனை மறைத்து வைத்து, தேர்வு அறைக்குள், சதீஷ்குமார் எடுத்துச் சென்றுள்ளார். மேலும், வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மொபைல் போன் உதவியால், ஆன்லைனில் பதில் பார்த்து விடை அளித்துள்ளார். இதை தேர்வு அறை கண்காணிப்பாளர் பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து, சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் கபிஸ்தலம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். இருப்பினும், சதீஷ்குமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, கட்டாய ஓய்வில் பணியிலிருந்து நேற்று முதல் விடுவிக்கப்பட்டார்.

இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் வெளியிட்டார்.






      Dinamalar
      Follow us