sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்

/

பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்

பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்

பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்


ADDED : ஏப் 04, 2025 12:51 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை அமைக்கப்படும்; அத்துடன், உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

 ↓'உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்' என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான முழக்கமாக, பொதுவுடைமை தத்துவத்தை வடித்து தந்தவர் புரட்சியாளர் காரல் மார்க்ஸ். அவரது உருவச்சிலை சென்னையில் அமைக்கப்படும்

 ↓அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும், உறங்காப்புலி என போற்றப்பட்டவருமான பி.கே.மூக்கையா தேவருக்கு, இன்று, 103வது பிறந்த நாள். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், 1923ம் ஆண்டு ஏப்., 4ம் தேதி பிறந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில், 1952ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் வென்றார்.

அதன்பின், 1957, 1962, 1967, 1971, 1977 தேர்தல்களில், தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். மேலும், 1971ம் ஆண்டு ராமநாதபுரம் லோக்சபா தொகுதியிலும் வெற்றி பெற்றார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக பார்லிமென்டில் முழங்கியவர். அவரை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் கட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.






      Dinamalar
      Follow us